Wednesday, December 26, 2007

டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகள் உபயோகித்தால் விளைச்சலும், லாபமும் அதிகம்


தமிழ் நாடு தேனி மாவட்டம் டிஷ்யூ கல்சர் வாழை பயிரிடுவதில் முக்கிய மையமாக விளங்குகிறது. அங்கு விவசாயிகள் டிஷ்யூ கல்சர் உபயோகித்து கிராண்ட் நெயின் என்ற வகை வாழை பயிரிடுகிறார்கள்.

டிஷ்யூ கல்சர் இவ்வளவு பிரபலமாக என்ன காரணம்?
  • விளைச்சல் அதிகம்.
  • வியாதி, பூச்சி குறைவு.
  • எல்லா பருவ காலங்களிலும் இளஞ்செடிகள் கிடைக்கும்.
  • உன்னதமான வகைகளை தேர்ந்தெடுத்து இளஞ்செடிகள் தயாரிக்கப் படுகின்றன.
கீழ்க்கண்ட செடிகள் வியாபார ரீதியாக பெரிய அளவில் தயாரிக்கப் படுகின்றன:
  • பழங்கள்: வாழை, அன்னாசி
  • கரும்பு: கரும்பு ஆலைகள் டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகளை அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்துள்ளன.
  • வாசனைப் பொருள்கள்: கொச்சியில் உள்ள வாசனைப் பொருள்கள் கழகம் முற்போக்கு விவசாயிகள் மூலம் டிஷ்யூ கல்சர் ஏலக்காய், வனில்லா பயிர் செய்வதை அதிகரித்துள்ளது.
  • மூலிகைகள்: கத்தாழை, வெள்ளை முசிலிக் கிழங்கு.
  • பூக்கள்: Carnation, Gerbera.
  • மரங்கள்: சந்தனம், யூகலிப்டஸ், தேக்கு.
இந்திய அரசாங்கம் கீழ்க்கண்ட இரண்டு தொழில் நுட்பப் பூங்காக்களை அமைத்துள்ளது:
மத்திய மற்றும் மாநில அரசு சலுகைகளும் உண்டு - உங்கள் அருகிலுள்ள விவசாய அலுவலகத்தில் விசாரியுங்கள்.

கனரா வங்கி மற்றும் சில வங்கிகளும் டிஷ்யூ கல்சர் விவசாயக் கடனுக்கு முதன்மை அளிக்கிறார்கள்.

No comments: