Thursday, May 8, 2008

மூங்கில் பயிர் செய்வதில் நல்ல லாபம் கிடைக்கிறது


மூங்கில் நல்ல லாபம் கொடுக்கும் பயிர் என்று நாம் நினைத்ததில்லை. ஆனால் இப்பொழுது?:

  • மூங்கில் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் அதிகரித்துள்ளன. ஆகவே மூங்கிலுக்கு தேவை அதிகம்.
  • மூங்கில் குருத்து ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தைவான், கொரியா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகள் மூலம் அதிக விளைச்சல் பெறலாம்.
  • மூங்கிலில் முள் இருப்பதால் பராமரிப்பும் அறுவடையும் கடினம். இப்பொழுது முள் இல்லாத வகை இளஞ்செடிகள் கிடைக்கிறது.
  • மூங்கில் பயிர் வேலை கொள்ளும். ஆனால் பராமரிப்புக்கும் அறுவடைக்கும் இய்ந்திரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
  • மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியில் 2007-08 ம் ஆண்டு 200 விவசாயிகளுக்கு மூங்கில் பயிர் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. 2008-09 ம் ஆண்டு 2300 விவசாயிகளுக்கு முற்போக்கு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

மூங்கில் பயிர் செய்வதில் மற்ற பயன்கள்:

  • இருக்கும் நிலத்தில் மற்ற மரங்களை விட 20 மடங்கு அதிகம் மரம் வளரும். மற்ற மரங்கள் வளர்ந்து பலன் தர 30 ஆண்டுகள் ஆகலாம். மூங்கில் குருத்து, தண்டு 3-4 ஆண்டுகளிலேயே அறுவடை செய்யலாம்.
  • தரக்குறைவான நிலத்திலும் நன்றாக வளரும்.

டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகள் தயாரிப்போர்:

குறிப்பு: நாம் எந்த நிறுவனத்தையும் பரிந்துரை செய்யவில்லை.

No comments: