Wednesday, May 28, 2008
மழையை நம்பி விவசாயம் செய்வோருக்கு வெட்டிவேர் உதவுகிறது
பல காலமாக தென்னிந்தியாவில் வெட்டிவேர் குடிநீரில் வாசனைக்கு போடவும், கோடை காலத்தில் குளிர்ச்சிக்கு ஜன்னல் தட்டியாகவும் உபயோகிக்கப்படுகிறது.
இப்பொழுது உலக வங்கியும், பன்னாட்டு அமைப்புகளும் வெட்டிவேர் விவசாயிகளுக்கு பல வகைகளில் உதவுவதை அறிய வந்துள்ளனர்.
மழையை நம்பி விவசாயம் செய்வோருக்கு வெட்டிவேர் மிக உதவுகிறது.
Friday, May 16, 2008
நெசவுத் தொழிலில் வருமானத்தைப் பெருக்க புதிய வழிகள்
நெசவாளர்களுக்கு புதிய வழிகள்:
- நவீன நெசவுத் தொழில் நுட்பம்.
- செயற் திறன் வளர்ச்சி.
- நவீன பாணி (ஃபாஷன்) வடிவமைப்பு.
- வணிக அணுகு முறை.
- தேசிய ஃபாஷன் தொழில்நுட்ப நிறுவனம் (NIFT) ஃபாஷன் வடிவமைப்பு, பயிற்சி மற்றும் செயற் திறன் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆக 8 நகரங்களில் உள்ளது. கேரளா கண்ணனூரில் 9-வது மையம் திறக்கப் பட்டுள்ளது.
- கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரிகள் சேலம் முதலாக 6 நகரங்களில் உள்ளன.
- தமிழ்நாடு கோஆப்டெக்ஸ் போன்ற மாநில கூட்டுறவுச் சங்கங்கள் விற்பனைக்கு உதவி செய்கின்றனர்.
பரிசோதனை மற்றும் தரக்கட்டுப்பாடு:
- துணி பரிசோதனை மையம், மதுரை.
- நெசவாளர் பணிச் சங்கங்கள்.
நெசவுத் தொழிலுக்கு மென்பொருள்:
- EnKay CAD solutions, Bangalore: டாபி உரு அமைப்பு செய்ய. ஜாக்கார்ட் துளைப் பட்டைகள் செய்ய இலவச மென்பொருள்.
- GC's Technologies, Bangalore: தர்மாவரம், காஞ்சீபுரம், கும்பகோணம் மற்றும் கர்நாடக நெசவாளர் உபயோகிக்கும் மென்பொருள் மற்றும் இயந்திரங்கள்.
குறிப்பு: நாம் எந்த நிறுவனத்தையும் பரிந்துரை செய்யவில்லை.
Thursday, May 8, 2008
மூங்கில் பயிர் செய்வதில் நல்ல லாபம் கிடைக்கிறது
மூங்கில் நல்ல லாபம் கொடுக்கும் பயிர் என்று நாம் நினைத்ததில்லை. ஆனால் இப்பொழுது?:
- மூங்கில் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் அதிகரித்துள்ளன. ஆகவே மூங்கிலுக்கு தேவை அதிகம்.
- மூங்கில் குருத்து ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தைவான், கொரியா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகள் மூலம் அதிக விளைச்சல் பெறலாம்.
- மூங்கிலில் முள் இருப்பதால் பராமரிப்பும் அறுவடையும் கடினம். இப்பொழுது முள் இல்லாத வகை இளஞ்செடிகள் கிடைக்கிறது.
- மூங்கில் பயிர் வேலை கொள்ளும். ஆனால் பராமரிப்புக்கும் அறுவடைக்கும் இய்ந்திரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
- மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியில் 2007-08 ம் ஆண்டு 200 விவசாயிகளுக்கு மூங்கில் பயிர் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. 2008-09 ம் ஆண்டு 2300 விவசாயிகளுக்கு முற்போக்கு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
மூங்கில் பயிர் செய்வதில் மற்ற பயன்கள்:
- இருக்கும் நிலத்தில் மற்ற மரங்களை விட 20 மடங்கு அதிகம் மரம் வளரும். மற்ற மரங்கள் வளர்ந்து பலன் தர 30 ஆண்டுகள் ஆகலாம். மூங்கில் குருத்து, தண்டு 3-4 ஆண்டுகளிலேயே அறுவடை செய்யலாம்.
- தரக்குறைவான நிலத்திலும் நன்றாக வளரும்.
டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகள் தயாரிப்போர்:
குறிப்பு: நாம் எந்த நிறுவனத்தையும் பரிந்துரை செய்யவில்லை.
Thursday, April 17, 2008
அதிக வருமானம், குறைந்த தண்ணீர் - எஸ்.ஆர்.ஐ. என்ற திருந்திய நெல் சாகுபடி
எஸ்.ஆர்.ஐ. முறையின் முக்கிய அம்சங்கள்:
- வழக்கம் போல வயலில் தண்ணீரை அதிகம் பாய்ச்ச வேண்டாம். பாய்ச்சலும் காய்ச்சலுமான நீர்ப்பாசனம்.
- 14-நாள் நாற்றை கவனமாக சுமார் 3/4 அடி இடம் விட்டு ஒற்றை நாற்று நட்டால் போதும்.
- உருளும் களைக் கருவியை வைத்து, பயிற் வளர்ந்து மறைக்கும் முன்னர் சில தடவை களை எடுக்க வேண்டும்.
- இயற்கை உரம் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் சேமிப்பு தவிர மற்ற பயன்கள்:
- ஒரு ஹெக்டேருக்கு (சுமார் 2 1/2 ஏக்கர்) வழக்கமாக 30 முதல் 60 கிலோவுக்கு பதிலாக 8 கிலோ விதை மட்டுமே தேவை.
- ரசாயன உரம், பூச்சி மருந்து சீராகவே தேவை.
தமிழ்நாட்டில் எஸ்.ஆர்.ஐ. முறைப்படி நெற்பயிர் விவசாயம் செய்து பயன் பெற்ற சில விவசாயிகள்:
- சிவகங்கை மாவட்டத்தில் தண்ணீர் அதிகம் கிடையாது. அங்கு மஹிபாலன்பட்டி திரு. K. சண்முகம் சென்ற வருடம் ஹெக்டேருக்கு 4,750 கிலோ அறுவடை செய்தார். இந்த வருடம் எஸ்.ஆர்.ஐ. முறைப்படி 8,750 கிலோ.
- சேலம் மாவட்டம் பள்ளதாத்தனூர் திரு. C. ரவி சென்ற வருடம் ஹெக்டேருக்கு 6.483 கிலோ அறுவடை செய்தார். இந்த வருடம் எஸ்.ஆர்.ஐ. முறைப்படி 9,633 கிலோ.
- விழுப்புரம் திருமதி. விஜயலட்சுமி அதே அளவு த்ண்ணீர் உபயோகித்து 40 சதவிகிதம் அதிக நிலத்தில் விவசாயம் செய்கிறார்.
பல விவசாயிகள் விவசாயம் செய்து பார்த்த ஆய்வில் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 12,719 அதிக நிகர வருமானம் கிடைக்கிறது. வழக்கமாக செய்யும் விவசாயம் போல இரண்டு மடங்கு லாபம்!
Tuesday, April 15, 2008
செங்கல் சூளையில் எரிபொருளைக் குறைத்து அதிக லாபம் பெருங்கள்
இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதி்கமாக செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கிராமங்களில் உள்ளன. இவை மூன்று வகை:
- அடுக்குச் சூளை.
- கட்டுக் கால்வாய் சூளை. இவற்றில் சில நிலையான புகை போக்கி, சில நகற்றக்கூடிய புகை போக்கி உள்ளவை.
- கீழ் நோக்கி காற்றோட்டச் சூளை.
- பத்து லட்சம் செங்கல் தயாரிக்க 105 டன் நிலக்கரி மட்டுமே தேவை. கட்டுக் கால்வாய் சூளைக்கு 160 டன் நிலக்கரி தேவை.
- ஆனால் ஆரம்ப முதலீடு கட்டுக் கால்வாய் சூளைக்கு 15 லட்ச ரூபாய் மட்டுமே. செங்குத்துச் சந்து செங்கல் சூளைக்கு 21 லட்ச ரூபாய் முதல் போட வேண்டும் (2001 மதிப்பீடு).
- இந்த தொழில்நுட்பம் குறைந்த பட்சம் தினம் 8000 செங்கல் தயாரிக்கும் சூளைகளுக்கே உதவும்.
- மழைக்கு கூறை உள்ளதால் வருடம் முழுவதும் இயக்க முடியும்.
- நிலம் குறைவாகவே தேவை.
- சீராக சுடுவதால் நல்ல தரமுள்ள செங்கல் தயாரிக்கிறது.
- எரிபொருளை சிக்கனமாக உபயோகம் செய்வதால் மாசுபடுத்தும் புகையும், தூசும் குறைவு.
Monday, April 14, 2008
உப்பு நீர்ப் பாசனம் செய்து பல மூலிகைகள் பயிர் செய்ய முடியும்
உப்பு நீர்ப் பாசனம் செய்து பயிர் செய்யக் கூடிய மூலிகைகளில் ஒன்று நித்யகல்யாணி.
- உப்பு இயற்கையிலேயே பாறைகளிலும், கனிமப்பொருள்களிலும் இருப்பதால் மழைநீர் தவிர மற்ற எல்லா நீரிலும் ஓரளவு இருக்கும்.
- நீரில் எவ்வளவு உப்பு இருக்கிறது என்பதை EC Meter என்ற கருவி வைத்து மின்சாரக் கடத்தல் மூலம் அளக்க முடியும். நல்ல தண்ணீருக்கு EC அளவு 0 முதல் 1 வரை இருக்கும். கடல் நீர் EC அளவு சுமார் 45.
- பல பயிர்களுக்கு உப்புத்தண்ணீர் ஆகாது. சில பயிர்கள் விளைச்சல் குறையும். ஆனால் சில பயிர்கள் நன்றாக வளரும்.
- EC அளவு 0 முதல் 10 வரை உள்ள உப்புத்தண்ணீர உபயோகப் படுத்தப்பட்டது.
- ஆடாதொடை, கத்தாழை, நிலவேம்பு, நித்யகல்யாணி, கரிசலாங்கண்ணி, கண்வழிக்கிழங்கு, சக்கரைக்கொல்லி, தும்பை, துளசி, கீழாநெல்லி, மணத்தக்காளி மற்றும் தூதுவளை இடிகரை, ஆருக்குட்டி கிராமத்தில் பயிர் செய்யப்பட்டன. ஒரு விவசாயி EC 2 முதல் 4 வரை உள்ள கிணற்றுத் தண்ணீரில் பயிர் செய்தார். மதன கோபால் என்ற மற்றொரு விவசாயி EC 6 உள்ள கிணற்றுத் தண்ணீரில் பயிர் செய்தார்.
ஆகவே கிணற்றுத் தண்ணீர் உப்பாக இருந்தால் விவசாயிகள் சோர்வடைய வேண்டாம். பல மூலிகைகள் உப்புத் தண்ணீரிலும் நன்றாக வளருகின்றன.
மூலிகைகளுக்கு மார்க்கெட்டில் ஏற்றுமதி வாய்ப்பும் கூடவே, தேவை அதிகரித்து வருகிறது.
Wednesday, January 9, 2008
தண்ணீரில் பரவும் நோய்களைத் தடுக்க சுகாதாரம் மிக முக்கியம்
இந்த திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப் படுகிறது:
- இந்திய அரசாங்கம் முழுமையான சுகாதாரம் அடைந்த பஞ்சாயத்துகளுக்கு ரூ. 50,000 முதல் ரூ. 500,000 வரை பரிசளிக்கிறது.
- ஏழ்மைக்கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இந்த செலவில் அரசு உதவி உண்டு.
- பல மாநில அரசுகள் சமூகத் தலைமையில் சுய சேவைச் சங்கங்களின் உதவியுடன் செயல்படுத்துகின்றன.
- தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் மாநில கிராமிய வளர்ப்பு பணிமனை ஒரு கிராமிய சுகாதார பூங்கா அமைத்துள்ளது. அங்கு 22 மாதிரி கிராமக் கழிப்பறைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. விலை ரூ. 150 முதல் ரூ. 850 வரை.
- ஹரியாணா: 158,000 -க்கு மேல் வீடுகளிலும், 2,267 பள்ளிக்கூடங்களிலும், 1,042 குழந்தை பராமரிப்புக் கூடங்களிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 60 சுகாதாரப் பொருள் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
- கர்நாடக மாநிலம் கிராமங்களில் தபால் ஊழியர்கள் மூலமாக சுகாதாரம் பற்றி செய்தி பரப்ப தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
- தமிழ் நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமிய சுகாதாரத்தை பரப்ப நூதன முறைகளைக் கையாள்கின்றனர்.
திட்டத்தின் பயன்கள்:
- காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, வயிற்றில் புழு முதலான தண்ணீரால் பரவும் நோய்கள் தடுக்கப்படும்.
- சிக்கன்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் பரவுவது குறையும்.
Sunday, January 6, 2008
தகவல் உரிமைச்சட்டம் கிராமப்புறங்களை மாற்றும் ஆற்றல் கொண்டது
மாவட்ட ஆட்சி உடனடியாக சாலை மற்றும் வடிகால்கள் வேலையைத் துவக்கியது. 32 கிராம வாசிகளுக்கு வீடுகள் கொடுக்கப்பட்டன. அத்துடன் எந்த கிராமவாசிகள் கிராம வீட்டு வசதித் திட்டப்படி வீடுகள் கொடுக்க தகுதியானவர்கள் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டது.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியக் குடிமக்கள் அரசாங்கத்திடம் கீழ்க்கண்டவற்றைக் கேட்டு மனு கொடுக்கலாம்:
- அரசாங்க வேலைகள், ஆவணங்கள், பதிவுகள்.
- அவற்றை பிரதி, குறிப்பு எடுக்கலாம்.
- மின் அச்சு அல்லது மின் பிரதி கேட்கலாம்.
- எழுத்திலேயோ அல்லது மின் அஞ்சல் மூலமாகவோ ஆங்கிலம், ஹிந்தி அல்லது அந்த மாநில மொழியில் விண்ணப்பம் பொதுமக்கள் தகவல் அதிகாரிக்கு கொடுக்கலாம். மாதிரி இங்கே.
- தகவல் கேட்பதற்கு காரணம் கொடுக்க வேண்டியதில்லை.
- விண்ணப்ப கட்டணம் ரூ. 10. அத்துடன் பிரதி ஒன்றுக்கு சுமார் ரூ. 2.
- பீஹார் மாநிலத்தில் தொலைபேசி மூலமாகவே விண்ணப்பம் கொடுக்கலாம்.
- பல சமூக சேவை சங்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள் விண்ணப்பம் செய்ய உதவி செய்கிறார்கள். உங்கள் ஊரில் விசாரிக்கவும்.
Thursday, January 3, 2008
தொலை மருத்துவம் கிராம மக்களின் உடல் நலக் காப்புக்கு உதவுகிறது
தமிழ் நாட்டில் அம்பாசமுத்திரத்தில் ஒரு பெண், மருத்துவ உதவியாளர் உதவியுடன், தேனியில் உள்ள டாக்டரிடம் கண் பரிசோதனை பெருகிறார்.
தொலை மருத்துவத்தில் நன்மைகள்:
- நோயாளி டாக்டரைப் பார்க்க சுற்றத்தாருடன் நெடுந்தூரம் பயணம் செய்து, அங்கு பல நாட்கள் தங்கி, அதிக செலவு செய்ய வேண்டியதில்லை.
- மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற முடியும்.
- எளிதில் பயணம் செய்ய முடியாத ஊர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கிறது.
தொலை மருத்துவ வசதி செய்து தரும் மற்ற மருத்துவ மனைகள் சில:
- நாராயண இருதயாலயா, பெங்களூர்: எளிதில் பயணம் செய்ய முடியாத ஊர்களில் வீடியோ மூலம் இருதய நோய்க்கு ஆலோசனை பெற முடியும். இதன் மூலம் பல குடும்ப மருத்துவர்கள் இருதய நோயை முன்னதாகவே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிகிறது.
- அபொல்லோ மருத்துவ மனை, சென்னை: மிசோராம் மாநிலத்தில் ஐசாவல் நகரம் போன்ற பயணம் செய்ய முடியாத ஊர்கள் சேர்ந்த பெரிய தொலை மருத்துவ அமைப்பு உண்டு.
- அம்ரிதா மெடிகல் இன்ஸ்டிட்யூட், கொச்சி: ஒரு சிறிய ஆஸ்பத்திரி போன்ற வசதியுள்ள நடமாடும் ஆஸ்பத்திரி உண்டு
- மணிபால் மருத்துவ மனை, பெங்களூர்.
- சர் கங்கா ராம் மருத்துவ மனை, புது டெல்லி.
- சர்க்கரை வியாதி ஆராய்ச்சி அற நிலையம், சென்னை.
- டாக்டர் வெங்கட்ராவ் தாவ்லே மருத்துவ அற நிலையம், அம்பாஜோகாய் , மராட்டிய மாநிலம்.