Monday, December 31, 2007

ஏ.டி.எம். என்ற தானியங்கி வங்கி இயந்திரங்கள் இந்திய கிராமங்களில் வர ஆரம்பித்துள்ளன


இந்தியாவில் 2007 வருட கடைசியில் சுமார் 30,000 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. பெரும்பாலாக இவை நகரங்களிலேயே உள்ளன. ஆனால் இப்பொழுது வங்கிகள் இந்த சேவையை கிராமங்களுக்கும் அறிமுகம் செய்ய ஆரம்பித்துள்ளன:
  • கிராமங்களிலும் ஏ.டி.எம். இயந்திரங்களை அமைக்க ஆரம்பித்துள்ளன.
  • சில வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்க ஆரம்பித்துள்ளன. இந்த விவசாயிகள் கடன் மனு கொடுத்து அனுமதி பெறுவதற்கு மட்டுமே வங்கிக்குச் செல்ல வேண்டும். மற்ற வேலைகளை ஏ.டி.எம். இயந்திரம் மூலமாகவே செய்யலாம்.

மற்றும் கிராமங்களுக்கு உகந்த பல அம்சங்கள் உடைய ஏ.டி.எம். இயந்திரங்கள் வர ஆரம்பித்துள்ளன:

Friday, December 28, 2007

கிசான் கிரெடிட் கார்ட் மூலம் விவசாயக் கடன் இப்பொழுது எளிதாகக் கிடைக்கிறது

இந்திய அரசாங்கம் 1999-ல் கிசான் கிரெடிட் கார்ட் (விவசாயக் கடன் அட்டை) திட்டத்தைத் துவக்கியது.

சமீபத்தில் செய்த ஒரு மதிப்பீடுப் படி 2007 வருட ஆரம்பத்தில் 6.5 கோடிக்கு மேல் இந்த கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சாதாரணமாக இந்தக் கடனை விவசாய வரவு செலவுக்கு உபயோகம் செய்யலாம். விதை, உரம், பூச்சி மருந்து, கருவிகள் வாங்கவும் கூலி கொடுக்கவும் கடன் வாங்கலாம். அறுவடை செய்து விற்ற உடன் கடன் திருப்பித் தர வேண்டும். அடுத்த பயிருக்கு திரும்ப கடன் கிடைக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்கி அதைத் திருப்பித் தர முடியாமல் விவசாயிகள் சங்கடப்படுவதை இது தடுக்கும்.

2004-ல் இந்த திட்டம் விரிவாக்கப்பட்டது:

இந்திய அரசாங்கம் 2003-ல் ஸ்வரோஜ்கர் (தானே தொழில் செய்பவர்) கிரெடிட் கார்ட் திட்டத்தைத் துவக்கியது. கைத்தறி நெய்பவர்கள், மீனவர்கள், ரிக்ஷா உரிமையாளர்கள், மற்ற சிறு தொழில் செய்பவர்களும், தானே தனக்குதவி குழுமங்களும் இந்தக் கடனை வரவு செலவுக்கும் தொழில் முதலீடு செய்வதற்கும் உபயோகிக்கலாம். விவசாயத்தை ஒட்டிய மீன் பண்ணை, பால் பண்ணை போன்ற தொழில்களுக்கும் இந்தக் கடனை உபயோகிக்கலாம். 2006 செப்டம்பர் மாதம் வரை சுமார் 5 லட்சம் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் கீழ்க்கண்ட வங்கிகளிடமிருந்து கிசான் கிரெடிட் கார்ட், ஸ்வரோஜ்கர் கிரெடிட் கார்ட் வாங்க முடியும்:

  • அரசாங்க அல்லது தனியார் வங்கி
  • கூட்டுறவு வங்கி
  • பிராந்தியக் கிராமிய வங்கி

Wednesday, December 26, 2007

டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகள் உபயோகித்தால் விளைச்சலும், லாபமும் அதிகம்


தமிழ் நாடு தேனி மாவட்டம் டிஷ்யூ கல்சர் வாழை பயிரிடுவதில் முக்கிய மையமாக விளங்குகிறது. அங்கு விவசாயிகள் டிஷ்யூ கல்சர் உபயோகித்து கிராண்ட் நெயின் என்ற வகை வாழை பயிரிடுகிறார்கள்.

டிஷ்யூ கல்சர் இவ்வளவு பிரபலமாக என்ன காரணம்?
  • விளைச்சல் அதிகம்.
  • வியாதி, பூச்சி குறைவு.
  • எல்லா பருவ காலங்களிலும் இளஞ்செடிகள் கிடைக்கும்.
  • உன்னதமான வகைகளை தேர்ந்தெடுத்து இளஞ்செடிகள் தயாரிக்கப் படுகின்றன.
கீழ்க்கண்ட செடிகள் வியாபார ரீதியாக பெரிய அளவில் தயாரிக்கப் படுகின்றன:
  • பழங்கள்: வாழை, அன்னாசி
  • கரும்பு: கரும்பு ஆலைகள் டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகளை அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்துள்ளன.
  • வாசனைப் பொருள்கள்: கொச்சியில் உள்ள வாசனைப் பொருள்கள் கழகம் முற்போக்கு விவசாயிகள் மூலம் டிஷ்யூ கல்சர் ஏலக்காய், வனில்லா பயிர் செய்வதை அதிகரித்துள்ளது.
  • மூலிகைகள்: கத்தாழை, வெள்ளை முசிலிக் கிழங்கு.
  • பூக்கள்: Carnation, Gerbera.
  • மரங்கள்: சந்தனம், யூகலிப்டஸ், தேக்கு.
இந்திய அரசாங்கம் கீழ்க்கண்ட இரண்டு தொழில் நுட்பப் பூங்காக்களை அமைத்துள்ளது:
மத்திய மற்றும் மாநில அரசு சலுகைகளும் உண்டு - உங்கள் அருகிலுள்ள விவசாய அலுவலகத்தில் விசாரியுங்கள்.

கனரா வங்கி மற்றும் சில வங்கிகளும் டிஷ்யூ கல்சர் விவசாயக் கடனுக்கு முதன்மை அளிக்கிறார்கள்.

Tuesday, December 25, 2007

கிராமியக் கண்டுபிடிப்புகளுக்கு ஆறாவது தேசியப் போட்டி

மராட்டிய மாநிலம் நாஸிக் ராம்தாஸ் மாதவராவ் ஜக்தப் கண்டுபிடித்த திராட்சையை தரவாரியாகப் பிரிக்கும் கருவி மூன்றாவது தேசியப் போட்டியில் பரிசு பெற்றது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ. 1,00,000, இரண்டாம் பரிசு ரூ. 50,000, மூன்றாம் பரிசு ரூ. 25,000.

  • கண்டுபிடிப்பு வகைகள்: இயந்திரங்கள், கருவிகள், தயார் செய்யும் முறைகள், எரிபொருள் மற்றும் மின்சாரம் குறைவாக உபயோகிக்கும் வழி, கடினமான வேலைகளை எளிதாக்குவது மற்றும் மூலிகை மருந்துகள்.
  • தரம் மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாடு செய்வதில் திறமை படைத்த தனி மனிதர்களும், குழுமங்களும் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

உங்கள் கண்டுபிடிப்புக்கு கீழ்க்கண்ட வேலைகளுக்கு நிதி கிடைக்கவும் வழியுண்டு:

  • தொழில் திட்டம் தயார் செய்ய.
  • மாதிரி தயார் செய்து, சோதனை செய்ய.
  • முன்னோடியாக தயாரிக்க.
  • வியாபார ரீதியாக தயாரிக்க.

உதாரணமாக ஹைதராபாத் மாட்ரிக்ஸ் பயோஸயின்ஸ் நிறுவனம் கீழ்க்கண்ட கண்டுபிடிப்புகளை வியாபார ரீதியாக NIF-உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெளியிட்டுள்ளது:

போட்டியில் சேர:

  • உங்கள் கண்டுபிடிப்பு பற்றிய முழு விவரங்களையும் வெள்ளை காகிதத்தில் எழுதி, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். கண்டுபிடித்தவர் படிப்பு, எப்படிக் கண்டுபிடித்தது கூடிய விவரங்களும், புகைப்படம் மற்றும் நிழற் படமும் முடி்ந்தால் அனுப்புங்கள். மூலிகை மருந்துக்கு காய்ந்த மூலிகையையும் வைத்து அனுப்பவும்.
  • கடைசி தேதி: 31 டிசம்பர் 2008.
  • அனுப்ப வேண்டிய முகவரி: National Coordinator (scouting and documentation), National Innovation Foundation (NIF), Satellite Complex, Bungalow No 1, Premchandnagar Road , Jodhpur Tekra, Ahmedabad 380015 Gujarat
  • மின் அஞ்சலில் அனுப்ப: campaign@nifindia.org

Monday, December 24, 2007

சுலபமாக குடிநீரை சுத்தம் செய்யும் வழி


குடிநீரை சுத்தம் செய்யும் முறை:
  1. மூடி உள்ள தெளிவான பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்துக கொள்ளுங்கள். அதை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.
  2. தண்ணீரை நிரப்பி மூடுங்கள்.
  3. பாட்டில்களை நெளிந்த தகரத்தில் வெய்யிலில் வையுங்கள்.
  4. அல்லது படத்தில் காட்டியவாறு கூறை மேல் வைக்கலாம்.
  5. வெய்யிலில் ஆறு மணி நேரம் வைக்கவும்.
  6. இப்பொழுது குடிநீர் உபயோகத்துக்குத் தயார்.
மற்ற ஆலோசனைகள்:
  • தெளிவான பாட்டில் எடுத்துக கொள்வது முக்கியம். பழுப்பு, பச்சை பாட்டில்கள் வேலை செய்யாது.
  • ஒரு லிட்டர் அல்லது இரண்டு லிட்டருக்கு மேல் பெரிய பாட்டில் வேண்டாம்.

Saturday, December 22, 2007

கிராமங்களுக்கு செலவு குறைந்த, புகை வராத அடுப்பு



தமிழ் நாடு விருதுநகர் மாவட்டம் அவியூர் கிராமத்தில் விவசாயக்கழிப்பு எரிபொருள் உபயோகம் செய்யும் புகை வராத 'ஊர்ஜா' அடுப்பு.


மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 5000 வீடுகளில இந்த அடுப்பை உபயோகம் செய்கிறார்கள்.

  • பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகம் வடிவமைத்தது.
  • அடுப்பு சீராக எறிவதற்காக பாட்டரியில் ஓடும் சிறிய மின்விசிறி உண்டு. இந்த பாட்டரி கரண்டில் சார்ஜ் செய்யக்கூடியது.
  • அடுப்பு விலை ரூ. 675.
  • ஆறு பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு மாதம் சுமாராக ஆறு பை எரிபொருள் தேவை. ஒரு 5-கிலோ பை எரிபொருள் விலை ரூ. 20. இத்துடன் 3 லிட்டர் கெரொசின் சேர்த்து மாத மொத்தச் செலவு ரூ. 147. இந்த குடும்பத்துக்கு முன்னால் ஆன செலவு ரூ. 390.
  • எரிபொருள் கரும்புச் சக்கை, நிலக் கடலைத் தோல்் மற்றும் சோளத் தட்டை மூலம் செய்யப்படுகிறது.
  • இந்த அடுப்பு தமிழ் நாடு, மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் சில இடங்களில் கிடைக்கிறது.

இந்த அடுப்பில் உள்ள சில பிரச்சினைகள்:

  • தோசை சுட, சப்பாத்தி போட தீயைக் குறைக்க முடியாது.
  • அடுப்பை பத்த வைத்த பின் காஸ், கெரொசின் அடுப்பு போல உடன் நிறுத்த முடியாது.
  • பத்த வைத்த பின் மேலும் எரிபொருள் சேர்க்க முடியாது. அடுப்பை நிறுத்தி, சாம்பல் எடுத்து விட்டு, எரிபொருள் போட்டு மீண்டும் பத்த வைக்க வேண்டும். ஆனால் இதை சில நிமிடங்களில் செய்ய முடியும்.

Wednesday, November 28, 2007

படிக்காத கிராமத்துப் பெண்களுக்கு தொழிற் பயிற்சி



மராட்டிய மாநிலம் ஸதாராவில் மன் தேஷி உத்யோகினியில் வெற்றிகரமாக பயிற்சி முடித்த ஒரு பெண்.

மன் தேஷி மஹிளா ஸஹகரி பாங்கு, HSBC பாங்குடன் சேர்ந்து அளிக்கும் சேவை.
  • கிராமத்துப் பெண்கள் நுண் கடன் வாங்கி தொழில் தொடங்க உதவும்.
  • மாணவிகளின் திறமை மற்றும் ஆர்வங்களை தெரிந்து கொள்ள முதலில் இலவச கவுன்சலிங் தரப்படும்.
  • ஒவ்வொரு மாணவிக்கும் எந்த பயிற்சிகள் தேவை என்பது முடிவு செய்யப்படும்.
  • பயிற்சிகள் ஒரு நாள் முதல் 10 நாள் வரை.

தரப்படும் பயிற்சிகள்:

  • கம்ப்யூட்டர் பயிற்சி, பை செய்யும் முறை முதலான தொழிற் பயிற்சிகள்.
  • பண வரவு செலவு பயிற்சி.
  • வியாபார நுட்பம், வியாபார முறையாகப் பேசவும், எழுதவும் பயிற்சி.
  • தன்னம்பிக்கைப் பயிற்சி.

Tuesday, November 27, 2007

விவசாயிகளுக்கு கான்ட்ராக்ட் விவசாயம் பயனளிக்கிறது



கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் விலாஸ்பூர் கான்ட்ராக்ட் விவசாயி ப்ரகாஷ் குல்கர்னி கடந்த இரண்டு ஆண்டுகளாக மருந்து கூர்க்கங் கிழங்கு பயிர் செய்கிறார்.

கான்ட்ராக்ட் விவசாயிகள் நல்ல லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பது சமீபத்தில் செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது.

  • முக்கியமாக விளைச்சல் செலவும், விற்பனை செலவும் மிகக் குறைவு.
  • கான்ட்ராக்டர்கள் விதை கூடிய இதர பொருட்களும் கொடுத்து, தொழில் நுட்ப உதவியும் செய்கிறார்கள்.
  • விளைபொருளை அறுவடைக்கு பின்னர் தரம் மேம்பாடு செய்யவும் பயிற்சி அளிக்கிறார்கள்.
  • மேலான தரம், மற்றும் தொடர்ச்சியாக விளைபொருள் கிடைப்பதற்கு கான்ட்ராக்ட் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

கான்ட்ராக்ட் விவசாயத்துக்கு மற்ற உதாரணங்கள்:

Monday, November 19, 2007

இணையதளத்தில் பழம், காய்கறி மொத்த விற்பனை


கிருஷ்ணகிரி மாவட்டம் பொச்சம்பள்ளியில் கடந்த ஜூன் மாதம் இணையதளத்தில் மாம்பழம் மொத்த விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது.

டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் இணையதளத்தில் பழம், காய்கறி மொத்த விற்பனை ஆரம்பிக்க ஸபல் நேஷனல் எக்ஸ்சேஞ் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

  • முதலில் ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் தக்காளி.
  • விவசாயிகள் விளைபொருளை வினியோக மையத்தில் ஸபல் நிறுவன வரைமுறைப்படி தர வாரியாக பிரித்துத் தரவேண்டும். ஸபல் நிறுவனம் பரிசோதனை செய்து தரச் சான்றிதழ் வழங்கும்.
  • அளவு, தரம், நிறம் மற்றும் வடிவம் சரியாக இருந்தால்தான் விற்பனைக்கு அனுமதி.
  • ஸபல் நிறுவனம் கிடங்கு, மற்ற வசதிகள் செய்து தரும்.
  • பணம் செலுத்திய பின்னர் ஸபல் நிறுவனம் வாங்கியவர்களிடம் விளைபொருளை ஒப்படைக்கும்.
  • அடுத்து விற்றவர்களுக்கு உடன் பணம் தரப்படும்.
  • ஒவ்வொரு விற்பனைக்கும் விற்ற விலை நாடு முழுவதும் இணையதளத்தில் பார்க்க முடியும்.

விவசாயிகளுக்கு பயன்:

  • விவசாயிகள் அறுவடை செய்யும் முன்னரே விலை தெரிந்து கொள்ளலாம்.
  • இடைத்தரகர்கள் குறைவு, ஆகவே செலவும் குறைவு.
  • விற்ற பணம் கிடைக்க ஸபல் நிறுவனம் உத்திரவாதம் தருகிறது.
  • தரக்கட்டுப்பாடு விளைபொருளை நல்ல விலைக்கு விற்க வழி செய்கிறது.

Thursday, November 1, 2007

குளிர் மாதங்களிலும் மல்லிகைப் பூ விளைய சிறு விவசாயிகளுக்கு தொழில் நுட்பம் உதவி செய்கிறது


கடந்த இரண்டு ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் கரியபட்டி கிராமத்தில் 60-70 சிறு விவசாயிகள் குளிர் மாதங்களிலும் வெற்றிகரமாக மல்லிகை மொக்கு அறுவடை செய்கிறார்கள்.
  • மல்லிகைப் பூ வருடம் முழுவதும் தேவைப் படுகிறது. ஆனால் குளிர் மாதங்களில் விளைவதில்லை.
  • கோவை விவசாய அமைச்சகம் செய்த தொழில் நுட்ப ஆராய்ச்சி.
    குளிர் மாதம் வரும் முன்னரே பயிரை கவனமாக பேணிக்கும் முறை ஆரம்பிக்கப் படும்.
  • தண்ணீரில் உரமும், ஒவ்வொரு மொட்டும் பூவாக பாஸ்பரஸ் சேர்த்து போடுகிறார்கள்.
  • இருபது சென்ட் நிலத்தில் தினம் 5-6 கிலோ மல்லிகை மொக்கு அறுவடை.
  • இந்த தொழில் நுட்ப ஆராய்ச்சி கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் மற்றும் நெற்பயிருக்கும் உதவி செய்கிறது.
  • உதாரணமாக கத்தரிச்செடி பூ உதிராமல் பாதுகாக்க தொழில் நுட்ப வழி உண்டு.

Monday, October 29, 2007

நுண் கடன் திட்டம் நில வளம், தண்ணீர் வசதி மற்றும் பல வழிகளில் கிராம மக்கள் வருவாயைப் பெருக்குகிறது

ஆந்திரா மாநிலம், சித்யாலா கிராமத்திலுள்ள பாக்யம்மா வத்லா எறுமை மாடு வாங்க நுண் கடன் வாங்கினார். அதன் மூலம் பால் விற்று தினப்படி வருவாய்க்கு வழி பிறந்தது.

நுண் கடன் கொடுப்பவர்கள்:

  • SKS Microfinance: 14 மாநிலங்களில் 507 கிளைகள், முக்கியமாக ஆந்திரா, கர்னாடகா, மஹாராஷ்ட்ரா, ஒரிஸ்ஸா மற்றும் மத்திய பிரதேஷ். மாடு வாங்க, விவசாயம், காய்கறிக் கடை போன்ற சிறு தொழில்கள், கூடை முடைதல், பானை செய்வது போன்ற கைவினைப் பொருட்கள், மற்றும் புகைப்படம், ப்யூட்டி பார்லர் போன்ற புதிய தொழில்களுக்கும் கடன் கொடுக்கிறார்கள்.
  • SHARE Microfin Limited: 312 கிளைகள், முக்கியமாக ஆந்திரா, சட்டீஸ்கர், கர்னாடகா, மஹாராஷ்ட்ரா மற்றும் மத்திய பிரதேஷ்.
    Gramin Koota: 44 கிளைகள் முக்கியமாக கர்னாடகா.
  • SEWA Bank: முக்கியமாக குஜராத்.
  • Spandana Charity Trust: முக்கியமாக ஆந்திரா.
  • ஐசிஐசிஐ வங்கி, கனரா வங்கி மற்றும் இதர வங்கிகள்.
  • தமிழ் நாட்டில் விவசாயம் மற்றும் தண்ணீர் வேலைக்கு நுண் கடன் வாங்க விவரங்களுக்கு தன் அறநிறுவனம் நம்பரைக் கூப்பிடலாம் - 26280236 (சென்னை) அல்லது 04522601673 (மதுரை).

Thursday, October 25, 2007

சேதாரம் குறையவும், தரம் மிகுந்து நல்ல விலைக்கு விற்பனை செய்யவும் சூரிய வெப்பக் கருவியில் காய வையுங்கள்



லூதியானாவில் உள்ள பஞ்சாப் விவசாயக் கல்லூரி தயார் செய்த நகற்றக் கூடிய சூரிய வெப்பக் கருவி.

  • இதுவரை செய்யப்பட்டு வரும் பெட்டி மாதிரி கருவிகளை விட 100 சதவிகிதம் அதிக திறன் கூடியது.
  • வெய்யிலில் காய வைப்பதை விட 70 சதவிகிதம் அதிக விலை பெறுங்கள்.
  • 20-30 கிலோ சிவப்பு மிளகாய்களை 3-4 வெய்யில் நாட்களில் காய வைக்கலாம்.
  • இந்த கருவியை சுமார் ரூ. 5500/- க்கு வாங்க அணுகவும்: M/s Vishwa Karma Solar Energy Corporation (Regd.), Phillaur - 144 410, Punjab.

சூரிய வெப்பக் கருவி தயார் செய்யும் மற்ற நிறுவனங்கள்:

  • மிளகாய், காய்கறி, மீன் மற்றும் மூலிகைகள் காய வைக்க முடியும்: ATR SOLAR (INDIA), 380, Kamarajar I street Bibikulam MADURAI - 625 002,TAMIL NADU Tel: 0452 - 4353673, 3256595 Email: atrsolar@gmail.com, theri@atrsolar.com
  • காய்கறி (உருளைக் கிழங்கு பொடி), பழம் (தக்காளி பொடி), மூலிகைகள் மற்றும் மிளகாய்ப் பொடி காய வைக்க முடியும்: PRINCE India, Jankibai Trust, Shamgiri, Agra Road, Deopur, DHULE - 424 005, Maharashtra. Tel: 02562 - 271795 Email: contact@princeindia.org

குறிப்பு: நாம் எந்த நிறுவனத்தையும் பரிந்துரை செய்யவில்லை.

Tuesday, October 23, 2007

தமிழ் நாட்டில் விவசாயிகளுக்காக ஒவ்வொரு வட்டத்திற்கும் வானிலை முன் அறிவிப்பு



தமிழ் நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தில் உள்ள விவசாய வானிலை ஆராய்ச்சி மையம் செய்யும் சேவை:
  • மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திற்கும் வானிலை முன் அறிவிப்பு.
  • அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை - வெப்ப தட்பம், காற்று வீசும் வேகம், காற்றில் ஈரம் அளவு மற்றும் மழையளவு.
  • அடுத்த நான்கு நாட்களுக்கு காலை எட்டரை மணிக்கும், மாலை இரண்டரை மணிக்கும் நிலவரம் வரைபடத்திலும் பார்க்கலாம்.

குறிப்பு: உங்கள் கேள்விகளையும், கருத்துக்களையும் தமிழில் எழுத:

  • தலைப்பில் கிளிக் (click) செய்யுங்கள்.
  • 'Post a comment' என்ற லின்க்கை (link) கிளிக் (click) செய்யுங்கள்.
  • முதலில் ஒரு தமிழ் எடிட்டரில் (editor) யூனிக்கோடில் (Unicode) தமிழில் எழுதிக்கொள்ளுங்கள்.
  • அதன் பிரதியை (copy) எடுத்து 'Leave your comment' என்ற பெட்டியில் ஒட்டுங்கள் (paste).
  • பின்னர் 'Publish your comments' என்ற லின்க்கை (link) கிளிக் (click) செய்யுங்கள்.

Monday, October 22, 2007

விவசாயிகள் ஆலோசனைக்கு இலவச தொலைபேசி சேவை

இந்திய அரசாங்கத்தின் விவசாய அமைச்சகம் செய்யும் சேவை:

  • 2004 ஜூன் மாதம் இந்தச் சேவை தொடங்கப்பட்டது.
  • விவசாயிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் - ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர.
  • தொலைபேசிக் கட்டணம் கிடையாது.
  • இந்தியா முழுவதும் ஒரே நம்பர் - 1551.
  • விவசாயிகள் தங்கள் மொழியிலேயே பேசலாம்.
  • முதல் கட்டமாக விவசாயப் பட்டதாரிகள் பதில் அளிப்பார்கள்.
  • இரண்டாவது கட்டமாக விவசாயப் பல்கலைக்கழகம் மற்றும் விவசாய அமைச்சகம் சார்ந்த வல்லுனர்கள் ஆலோசனை கூறுவர்.

Friday, October 19, 2007

குறைந்த தண்ணீர் - அதிக விளைச்சல்!



பவானி தாலுக்கா பெரியபுலியூர் கரும்புத் தோட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம்.

சொட்டு நீர்ப்பாசன அமைப்பு செய்யும் நிறுவனங்கள்:

குறிப்பு: நாம் எந்த நிறுவனத்தையும் பரிந்துரை செய்யவில்லை.

Thursday, October 18, 2007

விவசாய அமைச்சர் ஷரத் பாவார் சொல்கிறார் - விவசாயத்தை மட்டும் நம்பி இருக்காதீர்கள்!

விவசாயத்தை மட்டும் நம்பி இல்லாமல், வேறு வருமானத்திற்கும் வழி பாருங்கள்.

Wednesday, October 17, 2007

தமிழக விவசாயிகள் கோவையிலேயே ஆர்கானிக் சான்றிதழ் பெறலாம்.



தமிழ் நாடு குமிழியில் ஆர்கானிக் என்ற இயற்கை வேளாண்மை முறைப் பண்ணை.

Wednesday, October 10, 2007

விவசாயிகளுக்கு மொபைல் போனில் தகவல் (SMS)

நீங்களும் கூடிய சீக்கிரம் மொபைல் போனில் தகவல் (SMS) பெறலாம்:

  • ராய்ட்டர் செய்தி நிறுவனம் தொடங்கியுள்ள புதிய சேவை.
  • சரக்கு மார்க்கெட் விலை விபரம், செய்தி மற்றும் வானிலை.
  • இப்பொழுது வெங்காயம், சோளம் விலை விபரம். அடுத்து கோதுமை, சோயா, ஆரஞ்சு இதர சரக்குகள்.
  • ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் இதர இந்திய மொழிகளில்.
  • இப்பொழுது மராட்டிய மாநிலம். அடுத்து பஞ்சாப், குஜராத் மற்றும் கர்னாடகம். பின்னர் மற்ற மாநிலங்கள்.
  • ஒரு நாளைக்கு மூன்று முறை தகவல்.
  • 4000-க்கு மேல் விவசாயிகள் சந்தாதாரராக சேர்ந்துள்ளனர்.
  • சந்தா மாதம் ரூ 60.

Tuesday, October 2, 2007

இன்டர்நெட் மூலமாக உங்கள் ஊரிலிருந்தே உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யலாம்!

ஈபே (eBay) என்ற இன்டர்நெட் வியாபார தளம் மூலம் பலர் ஆடை, ஆபரணங்கள், தரை விரிப்பு, புடவை, திரைச்சீலை, மரம், தோல் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறார்கள்.
குறிப்பு: உங்கள் கேள்விகளையும், கருத்துக்களையும் தமிழில் எழுத:
  • தலைப்பில் கிளிக் (click) செய்யுங்கள்.
  • 'Post a comment' என்ற லின்க்கை (link) கிளிக் (click) செய்யுங்கள்.
  • முதலில் ஒரு தமிழ் எடிட்டரில் (editor) யூனிக்கோடில் (Unicode) தமிழில் எழுதிக்கொள்ளுங்கள்.
  • அதன் பிரதியை (copy) எடுத்து 'Leave your comment' என்ற பெட்டியில் ஒட்டுங்கள் (paste).
  • பின்னர் 'Publish your comments' என்ற லின்க்கை (link) கிளிக் (click) செய்யுங்கள்.