Wednesday, May 28, 2008

மழையை நம்பி விவசாயம் செய்வோருக்கு வெட்டிவேர் உதவுகிறது


பல காலமாக தென்னிந்தியாவில் வெட்டிவேர் குடிநீரில் வாசனைக்கு போடவும், கோடை காலத்தில் குளிர்ச்சிக்கு ஜன்னல் தட்டியாகவும் உபயோகிக்கப்படுகிறது.

இப்பொழுது உலக வங்கியும், பன்னாட்டு அமைப்புகளும் வெட்டிவேர் விவசாயிகளுக்கு பல வகைகளில் உதவுவதை அறிய வந்துள்ளனர்.

மழையை நம்பி விவசாயம் செய்வோருக்கு வெட்டிவேர் மிக உதவுகிறது.

Friday, May 16, 2008

நெசவுத் தொழிலில் வருமானத்தைப் பெருக்க புதிய வழிகள்



நெசவாளர்களுக்கு புதிய வழிகள்:


  • நவீன நெசவுத் தொழில் நுட்பம்.
  • செயற் திறன் வளர்ச்சி.
  • நவீன பாணி (ஃபாஷன்) வடிவமைப்பு.
  • வணிக அணுகு முறை.

பரிசோதனை மற்றும் தரக்கட்டுப்பாடு:

நெசவுத் தொழிலுக்கு மென்பொருள்:

குறிப்பு: நாம் எந்த நிறுவனத்தையும் பரிந்துரை செய்யவில்லை.

Thursday, May 8, 2008

மூங்கில் பயிர் செய்வதில் நல்ல லாபம் கிடைக்கிறது


மூங்கில் நல்ல லாபம் கொடுக்கும் பயிர் என்று நாம் நினைத்ததில்லை. ஆனால் இப்பொழுது?:

  • மூங்கில் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் அதிகரித்துள்ளன. ஆகவே மூங்கிலுக்கு தேவை அதிகம்.
  • மூங்கில் குருத்து ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தைவான், கொரியா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகள் மூலம் அதிக விளைச்சல் பெறலாம்.
  • மூங்கிலில் முள் இருப்பதால் பராமரிப்பும் அறுவடையும் கடினம். இப்பொழுது முள் இல்லாத வகை இளஞ்செடிகள் கிடைக்கிறது.
  • மூங்கில் பயிர் வேலை கொள்ளும். ஆனால் பராமரிப்புக்கும் அறுவடைக்கும் இய்ந்திரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
  • மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியில் 2007-08 ம் ஆண்டு 200 விவசாயிகளுக்கு மூங்கில் பயிர் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. 2008-09 ம் ஆண்டு 2300 விவசாயிகளுக்கு முற்போக்கு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

மூங்கில் பயிர் செய்வதில் மற்ற பயன்கள்:

  • இருக்கும் நிலத்தில் மற்ற மரங்களை விட 20 மடங்கு அதிகம் மரம் வளரும். மற்ற மரங்கள் வளர்ந்து பலன் தர 30 ஆண்டுகள் ஆகலாம். மூங்கில் குருத்து, தண்டு 3-4 ஆண்டுகளிலேயே அறுவடை செய்யலாம்.
  • தரக்குறைவான நிலத்திலும் நன்றாக வளரும்.

டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகள் தயாரிப்போர்:

குறிப்பு: நாம் எந்த நிறுவனத்தையும் பரிந்துரை செய்யவில்லை.

Thursday, April 17, 2008

அதிக வருமானம், குறைந்த தண்ணீர் - எஸ்.ஆர்.ஐ. என்ற திருந்திய நெல் சாகுபடி

திருந்திய நெல் சாகுபடி அல்லது எஸ்.ஆர்.ஐ. என்ற முறைப்படி தமிழ்நாட்டில் 12,000 ஏக்கரில் நெற்பயிர் விவசாயம் செய்யப்படுகிறது. கோவை தமிழ் நாடு விவசாயப் பல்கலைக்கழகம் 100 இடங்களில் செய்த ஆய்வில் 32 சத விகிதம் தண்ணீர் சேமிக்க முடியும் எனத் தெரிகிறது.

எஸ்.ஆர்.ஐ. முறையின் முக்கிய அம்சங்கள்:

  • வழக்கம் போல வயலில் தண்ணீரை அதிகம் பாய்ச்ச வேண்டாம். பாய்ச்சலும் காய்ச்சலுமான நீர்ப்பாசனம்.
  • 14-நாள் நாற்றை கவனமாக சுமார் 3/4 அடி இடம் விட்டு ஒற்றை நாற்று நட்டால் போதும்.
  • உருளும் களைக் கருவியை வைத்து, பயிற் வளர்ந்து மறைக்கும் முன்னர் சில தடவை களை எடுக்க வேண்டும்.
  • இயற்கை உரம் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்.

தண்ணீர் சேமிப்பு தவிர மற்ற பயன்கள்:

  • ஒரு ஹெக்டேருக்கு (சுமார் 2 1/2 ஏக்கர்) வழக்கமாக 30 முதல் 60 கிலோவுக்கு பதிலாக 8 கிலோ விதை மட்டுமே தேவை.
  • ரசாயன உரம், பூச்சி மருந்து சீராகவே தேவை.

தமிழ்நாட்டில் எஸ்.ஆர்.ஐ. முறைப்படி நெற்பயிர் விவசாயம் செய்து பயன் பெற்ற சில விவசாயிகள்:

  • சிவகங்கை மாவட்டத்தில் தண்ணீர் அதிகம் கிடையாது. அங்கு மஹிபாலன்பட்டி திரு. K. சண்முகம் சென்ற வருடம் ஹெக்டேருக்கு 4,750 கிலோ அறுவடை செய்தார். இந்த வருடம் எஸ்.ஆர்.ஐ. முறைப்படி 8,750 கிலோ.
  • சேலம் மாவட்டம் பள்ளதாத்தனூர் திரு. C. ரவி சென்ற வருடம் ஹெக்டேருக்கு 6.483 கிலோ அறுவடை செய்தார். இந்த வருடம் எஸ்.ஆர்.ஐ. முறைப்படி 9,633 கிலோ.
  • விழுப்புரம் திருமதி. விஜயலட்சுமி அதே அளவு த்ண்ணீர் உபயோகித்து 40 சதவிகிதம் அதிக நிலத்தில் விவசாயம் செய்கிறார்.

பல விவசாயிகள் விவசாயம் செய்து பார்த்த ஆய்வில் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 12,719 அதிக நிகர வருமானம் கிடைக்கிறது. வழக்கமாக செய்யும் விவசாயம் போல இரண்டு மடங்கு லாபம்!

மேலும் விபரங்களுக்கு இங்கே கிள்ளிகுளம், வல்லநாடு வேளாண்மைக் கல்லூரி முதல்வர் எழுதிய கட்டுரையைப் படியுங்கள்.

Tuesday, April 15, 2008

செங்கல் சூளையில் எரிபொருளைக் குறைத்து அதிக லாபம் பெருங்கள்


கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள நவீன தொழில்நுட்ப முறையில் செங்குத்துச் சந்து செங்கல் சூளை. இதை வி.எஸ். பி.கே அல்லது வி.எஸ்.கே என்றும் கூறுகிறார்கள்.

இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதி்கமாக செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கிராமங்களில் உள்ளன. இவை மூன்று வகை:
  • அடுக்குச் சூளை.
  • கட்டுக் கால்வாய் சூளை. இவற்றில் சில நிலையான புகை போக்கி, சில நகற்றக்கூடிய புகை போக்கி உள்ளவை.
  • கீழ் நோக்கி காற்றோட்டச் சூளை.

சீன கிராமங்களில் செங்கல் தயாரிப்போர் 1970 வாக்கில் செங்குத்துச் சந்து செங்கல் சூளை கண்டுபிடித்தனர். ஸ்விஸ் Agency for Development and Cooperation, The Energy and Resources Institute, புது டெல்லி மற்றும் பல பணிமனைகள் சேர்ந்து இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். 1996-ல் மாதிரி சூளை மத்தியப் பிரதேசத்தில் தாட்டியா என்ற ஊரில் நிருவப்பட்டது. இப்பொழுது இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான சூளைகள் இயக்கப்படுகின்றன.

  • பத்து லட்சம் செங்கல் தயாரிக்க 105 டன் நிலக்கரி மட்டுமே தேவை. கட்டுக் கால்வாய் சூளைக்கு 160 டன் நிலக்கரி தேவை.
  • ஆனால் ஆரம்ப முதலீடு கட்டுக் கால்வாய் சூளைக்கு 15 லட்ச ரூபாய் மட்டுமே. செங்குத்துச் சந்து செங்கல் சூளைக்கு 21 லட்ச ரூபாய் முதல் போட வேண்டும் (2001 மதிப்பீடு).
  • இந்த தொழில்நுட்பம் குறைந்த பட்சம் தினம் 8000 செங்கல் தயாரிக்கும் சூளைகளுக்கே உதவும்.
  • மழைக்கு கூறை உள்ளதால் வருடம் முழுவதும் இயக்க முடியும்.
  • நிலம் குறைவாகவே தேவை.
  • சீராக சுடுவதால் நல்ல தரமுள்ள செங்கல் தயாரிக்கிறது.
  • எரிபொருளை சிக்கனமாக உபயோகம் செய்வதால் மாசுபடுத்தும் புகையும், தூசும் குறைவு.

தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியை அடுத்த தோகூர் சிற்றூர் சுய உதவிக்குழு பெண்கள் 200 பேர் ஒன்று இணைந்து செங்குத்துச் சந்து செங்கல் சூளை நடத்துகின்றனர்.

Monday, April 14, 2008

உப்பு நீர்ப் பாசனம் செய்து பல மூலிகைகள் பயிர் செய்ய முடியும்



உப்பு நீர்ப் பாசனம் செய்து பயிர் செய்யக் கூடிய மூலிகைகளில் ஒன்று நித்யகல்யாணி.




  • உப்பு இயற்கையிலேயே பாறைகளிலும், கனிமப்பொருள்களிலும் இருப்பதால் மழைநீர் தவிர மற்ற எல்லா நீரிலும் ஓரளவு இருக்கும்.
  • நீரில் எவ்வளவு உப்பு இருக்கிறது என்பதை EC Meter என்ற கருவி வைத்து மின்சாரக் கடத்தல் மூலம் அளக்க முடியும். நல்ல தண்ணீருக்கு EC அளவு 0 முதல் 1 வரை இருக்கும். கடல் நீர் EC அளவு சுமார் 45.
  • பல பயிர்களுக்கு உப்புத்தண்ணீர் ஆகாது. சில பயிர்கள் விளைச்சல் குறையும். ஆனால் சில பயிர்கள் நன்றாக வளரும்.

கோவை தமிழ் நாடு விவசாயப் பல்கலைக்கழகம் 20-க்கும் மேலான மூலிகைகளை உப்பு நீரில் பயிர் செய்து பார்த்தனர்:

  • EC அளவு 0 முதல் 10 வரை உள்ள உப்புத்தண்ணீர உபயோகப் படுத்தப்பட்டது.
  • ஆடாதொடை, கத்தாழை, நிலவேம்பு, நித்யகல்யாணி, கரிசலாங்கண்ணி, கண்வழிக்கிழங்கு, சக்கரைக்கொல்லி, தும்பை, துளசி, கீழாநெல்லி, மணத்தக்காளி மற்றும் தூதுவளை இடிகரை, ஆருக்குட்டி கிராமத்தில் பயிர் செய்யப்பட்டன. ஒரு விவசாயி EC 2 முதல் 4 வரை உள்ள கிணற்றுத் தண்ணீரில் பயிர் செய்தார். மதன கோபால் என்ற மற்றொரு விவசாயி EC 6 உள்ள கிணற்றுத் தண்ணீரில் பயிர் செய்தார்.

ஆகவே கிணற்றுத் தண்ணீர் உப்பாக இருந்தால் விவசாயிகள் சோர்வடைய வேண்டாம். பல மூலிகைகள் உப்புத் தண்ணீரிலும் நன்றாக வளருகின்றன.

மூலிகைகளுக்கு மார்க்கெட்டில் ஏற்றுமதி வாய்ப்பும் கூடவே, தேவை அதிகரித்து வருகிறது.

Wednesday, January 9, 2008

தண்ணீரில் பரவும் நோய்களைத் தடுக்க சுகாதாரம் மிக முக்கியம்

சமீபத்தில் தமிழ் நாடு கிருஷ்ணகிரி தாலுக்கா வேப்பனபள்ளி கிராமத்தில் சுகாதார பொருள்கள் கடை திறக்கப்பட்டது. இது இந்த மாவட்டத்தின் தூய கிராம திட்டத்தின் ஒரு அங்கம்.

இந்த திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப் படுகிறது:

திட்டத்தின் பயன்கள்:

  • காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, வயிற்றில் புழு முதலான தண்ணீரால் பரவும் நோய்கள் தடுக்கப்படும்.
  • சிக்கன்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் பரவுவது குறையும்.