
- தேனி, ராமநாதபுரம், காஞ்சீபுரம் விவசாயிகள் நுண் கடன் திட்டம் மூலம் வயல் மற்றும் நீர்ப்பாசன வசதி அதிகம் பெற்றனர்.
- தேனியில் நுண் கடன் வாங்கி குளம், குட்டைகளைப் புதுப்பித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சிறுமணியேந்தலில் நுண் கடனை உரம் வாங்க உபயோகம் செய்கின்றனர். - நுண் கடன் திட்டத்துடன் ஆயுள் இன்சூரன்சு சேர்ப்பது குடும்பத்திற்கு பாதுகாப்பு.
- மதுரையில் வெள்ளம் வந்த போது நுண் கடன் திட்டக்குழுவினர் கூட்டு முயற்சியால் உடன் ஏரிக்கறையை அடைக்க முடிந்தது.
- காஞ்சீபுரம் மாவட்டம் பொன்பதிற்கூடத்திலுள்ள நுண் கடன் திட்டக்குழுவினர் சேமிப்பு அதிகரித்துள்ளது.
நுண் கடன் கொடுப்பவர்கள்:
- SKS Microfinance: 14 மாநிலங்களில் 507 கிளைகள், முக்கியமாக ஆந்திரா, கர்னாடகா, மஹாராஷ்ட்ரா, ஒரிஸ்ஸா மற்றும் மத்திய பிரதேஷ். மாடு வாங்க, விவசாயம், காய்கறிக் கடை போன்ற சிறு தொழில்கள், கூடை முடைதல், பானை செய்வது போன்ற கைவினைப் பொருட்கள், மற்றும் புகைப்படம், ப்யூட்டி பார்லர் போன்ற புதிய தொழில்களுக்கும் கடன் கொடுக்கிறார்கள்.
- SHARE Microfin Limited: 312 கிளைகள், முக்கியமாக ஆந்திரா, சட்டீஸ்கர், கர்னாடகா, மஹாராஷ்ட்ரா மற்றும் மத்திய பிரதேஷ்.
Gramin Koota: 44 கிளைகள் முக்கியமாக கர்னாடகா. - SEWA Bank: முக்கியமாக குஜராத்.
- Spandana Charity Trust: முக்கியமாக ஆந்திரா.
- ஐசிஐசிஐ வங்கி, கனரா வங்கி மற்றும் இதர வங்கிகள்.
- தமிழ் நாட்டில் விவசாயம் மற்றும் தண்ணீர் வேலைக்கு நுண் கடன் வாங்க விவரங்களுக்கு தன் அறநிறுவனம் நம்பரைக் கூப்பிடலாம் - 26280236 (சென்னை) அல்லது 04522601673 (மதுரை).